Wednesday 18 December 2013

சனி கொடுத்தால் யார் தடுப்பார்

   தற்கொலைக்குத் தூண்டும் ஏழரைச் சனி என்ற தலைப்பில் என்னிடம் ஜாதகம் பார்த்த அன்பரின் பலனை இரண்டு மாதங்களுக்கு முன்னர் எழுதி இருந்தேன்.
   இடைக்காலத்தில் முன்னுக்கு வந்து இரண்டு வருடங்களுக்கு முன்னர் எல்லாவற்றையும் இழந்து திருவோடு தூக்கும் நிலைக்கு வந்தவர்.
    துலாம் ராசிக்காரர. பார்த்த இடத்தில் எல்லாம் ஏழரைச் சனியின் தாக்கம். மீள்வது சிரமம் என்று சொல்லி இருக்கிறார்கள்.
 

 என்னை இவர் வெறும் ஜோதிடனாக மட்டும் பார்க்கவில்லை. வழிகாட்டியாகவே எண்ணி மனதில் இருந்த குறைகளையும் கொட்டித் தீர்த்தார்.
    பல வகையில் ஆறுதல் கூறினேன். சில வழிபாட்டு முறைகளைச் சொல்லி சனிபகவானை மனதார வணங்கி வரும்படி கேட்டுக் கொண்டேன்.
    அவரும் அவ்வாறே செய்தார். கடன் தொல்லை கழுத்தைப் பிடித்து நெரித்ததால் இடையிடையே மனம் சோர்ந்து விடுவார்.
     கடந்த வாரம் திடீரென்று எனக்கு போன் செய்தார். ஒரு கம்பெனியிலிருந்து அழைப்பு வந்திருக்கிறது. போய்ப் பார்க்கட்டுமா என்றார்.
    உடனே கிளம்பிப் போகும்படி சொன்னோன். இவரின் ஆவணங்களைச் சரிபார்த்த அவர்கள் வேலையை ஆரம்பிப்பதற்கு எவ்வளவு தொகை தேவை என்று கேட்டிருக்கிறார்கள்.
    ஒரு லட்சம் வெள்ளி கேட்கலாமா என என்னிடம் கேட்டார். இரண்டு லட்சம் வெள்ளியாக கேளுங்கள் என்று சொன்னேன். அவரும் அதன்படி கேட்டிருக்கிறார்.
   1லட்சத்து 80 ஆயிரம் வெள்ளிக்கான காசோலையை கொடுத்து விட்டார்கள். அதை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தார்.
   சனி கொடுத்தால் யார் தடுப்பார். கொடுத்த பணத்தை முறையாகப் பயன்படுத்தி தொழிலை விரிவுபடுத்து என்று சொன்னேன்.
     ஆசி வழங்குபடி கூறி விழுந்து வணங்கினார். மனப்பூர்வமாக வாழ்த்தினேன். சில பாகிஸ்தான் தொழிலாளர்களை வைத்து வேலையைத் தொடங்கி விட்டார்.
    மனதிற்கு சந்தோசமாக இருக்கிறது. மீண்டும் பழைய நிலைக்கு வர இயலாவிட்டாலும் தொழிலைத் தற்காத்துக் கொண்டால் பின்னர் அதன் வளர்ச்சி அபிரிமிதமாக இருக்கும் என்பது என் எண்ணம்.
   குடும்பத்தோடு சேர்ந்து வாழ இயலாத சூழ்நிலை உள்ளது. அதற்கு ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா என வினவினார்.
    தேவையில்லை, இன்னும் சில காலங்களில் அனைத்தும் சரியாகி விடும் என்று சொல்லி அனுப்பி இருக்கிறேன்.
      மேலும் இன்னொரு முக்கிய தகவலைப் பரிமாற நினைக்கிறேன். இந்தப் பையன் குறித்து என் நெருங்கிய நண்பர் மோகன் என்பவரிடம் பேசினேன்.
      மோகனும் என் ஆன்மீக ஆற்றல் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர். லண்டனில் வழக்கறிஞருக்குப் படித்து பட்டம் பெற்றவர். அந்த வகையில் இந்தப் பேச்சு ஆரம்பமானது.
     அப்படியா கவிஞர், அவரை வந்து பார்க்கச் சொல்லுங்கள். முறையான ஆவணங்கள் இருந்தால் முதலீடு செய்ய ஆள் இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை நான் செய்கிறேன் என்று கூறினார்.
     இதுவும் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக அமைந்தது.
.