Tuesday 5 January 2010

பொறுத்து இருங்கள்... புரிந்து கொள்வார்கள்...




அன்பு நண்பரே...
உங்கள் ஜாதக பலன் முழுவதையும் முகப்புத்தகம் (face book) ஏற்றுக் கொள்ளாது என்பதால் நவக்கிரக நாட்டியத்தில் விளக்கி இருக்கிறேன். படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.  சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள்.

உங்களுடைய லக்கனம் மிதுனம். ராசி ரிஷபம். நட்சத்திரம் மிருகசீரிடம் 2-ஆம் பாதம். நீங்கள் பிறந்த நேரம் இரவு 11 மணியாக இருக்க வேண்டும். மிருகசீரிடம் இரண்டாம் பாதம் அடிப்படையில் கணித்துப் பார்த்தபோது அந்த நேரம்தான் வருகிறது.

பொதுவாகப் பார்த்தால் உங்கள் ஜாதகம் சிறப்பாகவே இருக்கிறது. உங்களுக்கு அமலா யோகம், வசுமதி யோகம், நீசபங்க யோகம் போன்ற யோக அமைப்புகள் இருக்கின்றன.

அதோடு சதாசஞ்சார யோக அமைப்பும் இருக்கிறது. இது நாடோடி வாழ்க்கையை ஏற்படுத்தக் கூடியது. நீங்கள் எதிலும் நேர்மையைக் கடைப்பிடிப்பவராக இருப்பீர்கள். சங்கீதம் நாட்டியம் போன்ற துறைகளில் ஆர்வம் அதிகமாக இருக்கும்.

மகரம் 8-ஆம் வீடாக இருப்பது வெளிநாட்டு வாழ்க்கையை அமைத்துக் கொடுத்திருக்கிறது. உங்கள் ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் பாதிக்கப்பட்டிருக்கிறது. தாயாருக்கு உரிய ஸ்தானத்தில் ராகு இருப்பது தாயார் சம்பந்தப்பட்ட உறவை பாதிப்படையச் செய்திருக்கிறது. தந்தையாருக்கு உரிய ஸ்தானம் சனி வீடாக இருப்பதும் சனி சூரியன் வீட்டில் அமர்ந்திருப்பதும் சூரியன் பாதகமான இடத்தில் நீசபங்கம் பெறுவதும் பெற்றோர்களுக்கும் உங்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தி இருக்கக் கூடும்.

மேலும் மிருகசீரிடம் 2-ஆம் பாதத்துக்கு அதிபதி புதன். உங்களுக்கு புத்தி கூர்மை. இரக்க மனப்பான்மை போன்றவற்றை புதன் கொடுப்பார். அதே நேரத்தில் முன்கோபம் அதிகமாக வரும். அதைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதற்கு முன்னர் ராகு தசை நடந்தது. இந்தக் காலகட்டத்தில் குடும்ப உறவு சீர்குலைந்து போயிருக்கும். இப்போது குரு மகா தசை நடக்கிறது.2012- 5-ஆம் மாதம் வரை பாதகமான நிலைதான்.

அதன்பிறகு வருகின்ற சூரிய புத்தியில் அதாவது 2013- 3-ஆவது மாதத்திற்கு பிறகு பெரிய மாற்றத்தை காண்பீர்கள். அதன் பின்னர் குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள்.

போன ஜென்ம கர்மா பாதிக்கப்பட்டிருந்தால் பெற்றோர்களின் அன்பு கிடைப்பது அரிது. அந்த நிலை தான் உங்களுக்கும். உணவுப் பழக்கங்களில் கட்டுப்பாடு தேவை. வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் எச்சரிக்கையாக இருங்கள்.

உங்களால் இயன்ற அளவு ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யுங்கள். வரும் காலத்தில் நல்லதே நடக்கும்.

No comments:

Post a Comment