Sunday 16 September 2012



எல்லாம் சனி பகவான் செய்த வேலை அய்யா.


வல்லியர் தெள்ளியர் ஆயினும் ஊழ் வினை மெல்ல வந்து உறுத்தும் என்பது பெரியவர்கள் வாக்கு. அது சும்மா போகுமா?

கிரைனைட் கிங் என்று சொல்லப் பட்ட பிஆர் பழனிச்சாமி இப்போது சிறைக் கம்பி களூக்கு இடையே சிக்கிக் கொண்டு சிதைந்து போய் நிற்கிறார்.

அவருக்கு அல்லக் கைகளாக இருந்த அரசாங்க அதிகாரிகள் எல்லாம் அலங்க மலங்க விழித்த படி அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.



பிஆர்பி...கிரானைட் கற்களைக் கிண்டினாரா? இல்லை கிட்டிப் புல் விளையாண்டாரா?... என்பது இந்தப் பகுதிக்கு தேவை இல்லாத விஷயம்.

ஆனால்.. மத்திய மாநில அரசுகளுக்கு மல்கோவா கொடுத்த பிஆர் பி ஏன் எலிப் பொறிக்குள் மாட்டிக்கொண்ட புலிக் குட்டிக் போல் இன்று முக்கி முணகிக் கொண்டிருக்கிறார்.

எல்லாம் சனி பகவான் செய்த வேலை அய்யா...எப்படி நான் அடித்துக் கூறுகிறேன் என்று நினைக்கிறீர்களா?

சில மாத்ங்களுக்கு முன்னர் கன்னியில் வக்கிரமான சனி பகவான்... அவரால் பலன் அடைந்தவர்கள் பல பேரின் பல்லைக் கழட்டி இருக்கிறார்.

அந்த வரிசையில் பி ஆர் பி யும் மாட்டிக் கொண்டிருப்பார் என்பது என் எண்ணம்.

அவருடைய ஜாத்க அமைப்பு எனக்கு தெரியாது. ஆனால் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் அதைதான் காட்டுகின்றன.

ஒரு வேளை கடந்த சனிப் பெயர்ச்சியின் போது அவர் ஜாதகத்தை ஊன்றி கவனித்து இருந்தால் இந்த் கண்டத்தில் இருந்து தப்பி இருக்கலாம் என்ப்து என் எண்ணம்.



இருந்தாலும் கொட்டி குவிந்த பணம்... அலட்சியம் காட்டிய அரசாங்கம். மாலை மரியாதை செய்த மாவட்ட ஆட்சியர்கள், கை கட்டி நின்ற காவல்துறை.. இவை யாவும் அவரின் அகக் கண்களுக்கு ஆப்பு வைத்து விட்டது.

அதன் விளைவுதான் இந்த அவலம்.

மேலும் அவருக்கு மாரக ஸ்தானாதிபதி தசை நடக்கலாம். அது அவருக்கு மாரகத்தை கொடுப்பதற்கு பதிலாக இந்த அவலத்தை அளித்து தங்கக் குவளையில் காப்பி குடித்த அவரை தகரக் குவளையில் தண்ணி குடிக்க வைத்து விட்டது.

இனியாவது இறைவன் திருவுள்ளத்துக்கு எதிராக இருக்காமல் ஜாதகத்தை சரியாக பார்த்து தகுந்த பரிகாரங்கள் செய்தால் தோஷம் விலகி சந்தோசம் நிலவும்.

No comments:

Post a Comment