Wednesday 31 July 2013

கல்யாணத்தைத் தடுக்கும் காளசர்ப்ப தோஷம்

நாகநந்தினி என்ற அழகான பெண். வயது 32. இரண்டு நாட்களுக்கு முன்னர் என்னை சந்தித்தார்.

அழகு இருந்தும் பணம் இருந்தும் திருமணம் மட்டும் நடக்கவில்லையே என்ற ஏக்கம் ஏராளமாக இருந்தது.



ஜாதகத்தைப்பார்த்தேன். கடுமையான காளசர்ப்பதோஷம். அதென்ன கடுமையான காளசர்ப்பதோஷம் என நினைக்கிறீர்களா?

இது வியாதி மாதிரிதான். சாதரண காய்ச்சல். டைபாய்டு. மலேசியா. டெங்கு என்பதுபோல்.

களத்திரகாரகனான சுக்கிரன் 8 ஆம் இடத்தில் மறைவு. சனியோடு சேர்க்கை. 7 ஆம் இடத்தில் சூரியன். இப்படி பல கோளாறு.

இதெல்லாம் விட மிக முக்கியமான விஷயம்... அந்த பெண்ணின் முக அமைப்பு நாகத்தைப் போல. 

நம்மைக் கூர்ந்து நோக்கினால் நாகப் பாம்பு படம் எடுத்துப் பார்ப்பதைப்போல பயப்பட வைக்கும்.

இப்படிப் பட்ட பெண்ணுக்கு கணவன் வாய்ப்பது கடினம். இருப்பினும் மணவாழ்க்கை அமைவதற்கு சில வழிகளைச் சொன்னேன்.

திருக்காளகஸ்திக்கு சென்று சர்ப்ப சாந்தி செய்யும்படி அறிவுறுத்தினேன். மேலும் தமிழ்நாட்டில் 48 வாரம் தங்கி இருக்கும்படி கூறினேன்.

தமிழ்நாடு ராமநாதபுரம் இந்தப் பெண்ணின் பூர்வீகம். சொந்த வீடு இருக்கிறது. அதில் இவரின் பெரியம்மா வசிக்கிறார்.

இவர் அங்கு இருந்து வாரம் ஒரு முறை இராமேஸ்வரம் சென்று கடலில் குளித்து தீர்த்தமாடி வந்தால் சர்ப்ப சாந்தி ஏற்படும்.

சங்கராபரணமாக சிவன் கழுத்தில் தவழும் நாகதேவன் மனம் இறங்கி மணவாழ்க்கைக்கு வழி அமைத்துக் கொடுப்பான் என்பது திண்ணம்.

இந்தப் பெண்ணுக்கு 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு பின்னர் கண்டிப்பாக கல்யாணம் நடக்கும். நல்ல கணவன் அமைவான். இது இறைவன் திருவருளால் ஈடேறும் என்பது திண்ணம்.

No comments:

Post a Comment