Wednesday 4 November 2009

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜாதகம்

இனம் கடந்து, மொழி கடந்து, மதம் கடந்து, நாடு கடந்து நேசிக்கப்படுகின்ற ஒரு மனிதரின் ஜாதகத்தை உங்கள் பார்வைக்கு வைத்திருக்கிறேன். இதில் நாம் பார்க்கப்போவது அவர் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்பதை மட்டுமே.





மற்றபடி கிரகங்களின் அமைப்பை வைத்து தன்மூப்பாக எந்தக் கருத்தையும் நான் வெளியிட விரும்பவில்லை. ஒருவரின் ஜாதக பலன் ஜென்மம், உடுமகா தசை, கோச்சாரம் என்ற வகையில் கணிக்கப்படுகிறது.

இதையெல்லாம் தாண்டி பூர்வ ஜாதகம் என்ற அமைப்பு இருக்கிறது. இதைக் கொண்டு போன பிறவியில் அவர் எப்படிப்பட்ட பிறப்பை எடுத்திருந்தார் என்பதையும் அவருடைய குண நலன்கள் எத்தகையது என்பதையும் ஓரளவு கணித்துவிடலாம் என அனுபவம் வாய்ந்த ஜோதிட ஞானி ஒருவர் கூறி இருக்கிறார்.அந்த வகையிலும் ரஜினியின் ஜாதகத்தை ஓர் ஆய்வு செய்து பார்த்தேன்.




ரஜினியின் ராசி மகரம். லக்கனம் சிம்மம். நட்சத்திரம் திருவோணம். (ஒருவேளை இதில் தவறு இருந்தால் சரியான ஜாதகத்தை என் பார்வைக்கு அனுப்பலாம்)

ஆனால், இந்த ஜாதக அமைப்புப்படி பெரும்பாலான விஷயங்கள், அவருடைய வெற்றிகள், குணாம்சங்கள் ஒத்துப் போகின்றன. அதனால் என் நண்பரிடம் அப்போது சில விஷயங்களைக் கூறினேன்.

அவரால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அப்போது விவேக சிந்தாமணியில் கூறுப்பட்டுள்ள ஒரு கருத்தை அவரிடம் எடுத்துச் சொன்னேன்.



"பட்சம் வழக்கறியாது

நித்திரை சுகமறியாது

பிச்சை தரமறியாது

இச்சை முறையறியாது"



இது தான் அந்தப்பாடல். இதில் பட்சம் என்பது சார்பு என்று பொருள். ஒருதலைப்பட்சமாக என்ற சொல் அடிக்கடி புழக்கத்தில் உள்ள ஒன்று. நாம் ஒருவர் மீது அன்பு செலுத்தி விட்டால் அவரைப்பற்றி மற்றவர்கள் என்ன குறை சொன்னாலும் நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

இந்த நிலையில்தான் என் நண்பர் இருந்தார். ரஜினிமீது கொண்ட அளப்பறிய காதல் அவரை ஓர் அரசியல் தலைவராக மட்டும்தான் என் நண்பரால் பார்க்க முடிந்தது.

நான் என் நண்பரிடம் என்ன சொன்னேன் என்பதை அடுத்த அங்கத்தில் விவரிக்கிறேன்.

1 comment: