Wednesday 18 November 2009

மலேசியாவில் ஒரு சாதனைத் தமிழர்

என்னுடைய வலைப்பூவை வலம் வருகின்ற அன்பு நெஞ்சங்களுக்கு பணிவான வணக்கங்கள். இரண்டு வாரமாக உங்கள் உள்ளத்தோடு உறவாடுகின்ற பாக்கியத்தை இழந்து விட்டேன். அதற்காக மன்னிக்க வேண்டுகிறேன்.





டத்தோ ரெனா. துரைசிங்கம்


ஒரு சாதனைத் தமிழரின் 50-ஆவது பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள வெளிநாடு சென்றிருந்தேன். அதனால்தான் நம்முடைய தொடர்பில் ஒரு நீண்ட தொய்வு.

உணவகம், திரையரங்கு, திரைப்படம் தயாரிப்பு என பல தொழில்களில் கொடிகட்டிப் பறக்கும் லோட்டஸ் குழுமத்தின் தலைவர டத்தோ ரெனா.துரைசிங்கம் அவர்களின் பிறந்த நாள் விழாதான் அது.

திருப்பத்தூர் தந்த வள்ளல் ரெங்கசாமி பிள்ளை- பார்வதி அம்மாள் தம்பதியரின் தவப்புதல்வர்களில் மூத்தவர் ரெனா.துரை. அண்ணனின் வழித்தடம் மாறாத தம்பிகள் இருவர். டத்தோ ரெனா. ராமலிங்கம். ரெனா. நாகசுந்தரம்.

ஒற்றுமைக்கு உதாரணமாக இருக்கும் இந்த சகோதரர்கள் பல நூறுகோடி ரூபாயில் கடற்கரை உல்லாசத்தளம் ஒன்றை எழுப்பி இருக்கிறார்கள். 2400 அறைகளை...அல்ல...அல்ல...அழகான சிறிய வீடுகளைக் கொண்ட இந்த உல்லாசத்தளம் மலேசியாவில் ஜொகூர் நகரத்துக்கு அருகில் இருக்கிறது.




இங்கிருந்து சிங்கப்பூருக்கு இருபது நிமிடத்தில் சென்றுவிடலாம். சும்மா கூப்பிடு தூரம்தான். அள்ள அள்ளக் குறையாத செல்வம் இருந்தாலும் கள்ளம் கபடு இல்லாத மனதுக்கு சொந்தக்காரர்கள். எளிமை...எளிமை... எளிமை...இந்தச் சொல் இவர்களைப் பார்த்து தன்னை புதுப்பித்துக் கொள்கிறது.




                                மோட்டார் சைக்கிளில் இருப்பவர் டத்தோ.ரெனா.துரைசிங்கம்
பின்னால் அமர்ந்திருப்பவர்
மலேசியாவில் பெர்லிஸ்  மாநிலத்தின்  முதலமைச்சர்
(கலைஞர் கருணாநிதியைப் போல)
அருகில் சிரித்துக் கொண்டு நிற்பது அடியேன்


பணிவு...பணிவு...பணிவு....இது இவர்களின் பாரம்பரியச் சொத்து. இந்த சாதனைத் தமிழரை வாழ்த்த எனக்கு வாய்ப்பு நல்கிய ஆண்டவனுக்கு ஆயிரம் லட்சம் கோடியாய் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதை என் வாழ்நாளில் கிடைத்த பெரும் பாக்கியமாக கருதுகின்றேன்.

அடுத்த பதிவில் சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு ஏன் வரவில்லை என்பதை குறிப்பிடுகிறேன்.

No comments:

Post a Comment