Sunday 15 September 2013

அவசரக் கல்யாணம்... அதிர்ச்சி தந்த மரணம்...!

இரண்டு ஆண்டுகளூக்கு முன்னர் நான் தமிழகம் சென்றிருந்த சமயம். ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்னைப்பார்க்க வந்திருந்தார்.

அவர் மகளுக்கு 18 வயது. திருமணம் செய்யலாமா என என்னிடம் கேட்டார். ஜாதகத்தைப் பார்த்தேன். திருமண வகையில் பிரச்சினை. செவ்வாயும் சுக்கிரனும் பாதகமான இடத்தில் இணைவு.

பெண் பார்ப்பதற்கு அழகாக இருப்பாள். கிராமம் என்பதால் கட்டுப்பாடுகள் அதிகம். ஏதாவது ஏடாகூடமாக நடந்துவிடக்கூடாது என அந்த தகப்பனாருக்கு தவிப்பு.

இரண்டு எட்டில் சர்ப்ப கிரகங்களின் ஆதிக்கம் வேறு கடுமையாக இருந்தது. ஏற்கனவே ஜாதகம் பார்த்த இடத்தில் சீக்கிரமாக திருமணத்தை நடத்தினால் நல்லது என கூறியதாக அவர் சொன்னார்.



அந்த ஜாதகர் சொன்னதிலும் ஆழ்ந்த கருத்து இருந்தது. அந்தப் பெண் தடம் மாறிச் செல்வதற்கு ஜாதக ரீதியாக வாய்ப்பு அதிகம் இருந்தததால் அவர் அப்படிச் சொல்லி இருக்கிறார்.

எனக்கும் அவரின் அவசரத்தில் உடன்பாடு இருந்தது. ஆனால் ஒரு விஷயத்தை அவரிடம் அழுத்தமாக சொன்னேன்.

உறவுக்கார மாப்பிள்ளையோ அன்னியமோ.. அது பிரச்சினை இல்லை. ஆனால் இருவருக்கும் உள்ள ஜாதகப் பொருத்தத்தைக் கவனமாக பார்க்க வேண்டும். 

தசவிதப் பொருத்தம் மட்டுமல்லாமல் ஏணைய சில முக்கிய பொருத்தங்களையும் கவனமாக பார்க்க வேண்டும் என கூறினேன்.

அதன் பின்னர் மலேசியா வந்து விட்டேன். அவர்கள் மாப்பிள்ளை பார்த்து திருமணத்தை நிச்சயித்து விட்டார்கள்.

மூன்று மாதங்களுக்கு முன்னர் அந்தப் பெண்ணுக்கு திருமணம் நடைபெறும் காலகட்டத்தில் தமிழகம் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டத்தால் நானும் திருமணத்தில் கலந்து கொண்டேன்.

அடுத்த வாரத்தில் மலேசியா திரும்பி விட்டேன். இரண்டு நாட்களுக்கு முன்னால் அதிகாலைப் பொழுது என் கைத்தொலைபேசி என்னை எழுப்பியது.

எடுத்துப் பேசிய போது அதிர்ச்சி தரும் தகவல் என் இதயத்தை கசக்கியது. நள்ளிரவு நேரத்தில் அந்தப் பையன் நெஞ்சு வலிக்கிறது என சொல்லி இருக்கிறார்... அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் உயிர் பிரிந்து விட்டது.

மருத்துவமனைக்கு செல்லக் கூட அவகாசம் அளிக்காமல் காலன் அவர் உயிரைக் கவர்ந்து சென்றுவிட்டான்.

சரியாக ஜாதகம் கணிக்காமல் திருமணம் செய்தால் அந்தப்பெண் கணவனைப் பிரிந்து வந்து விடுவார் என்பது என் கணிப்பு.

ஆனால், ஒரேயடியாக கணவனைத் தொலைத்து விட்டு தாய் வீடு வருவாள் என கனவிலும் நினைக்கவில்லை.

மகளின் வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே என அந்தப் பெண்ணின் பெற்றோர் என்ன பாடுபடுவார்கள் என்பதை என்னால் உணர முடிகிறது.

அதைவிட பலமடங்கு என் மனம் வேதனைப்படுகிறது. என்ன செய்வது இறைவன் திருவுள்ளம் அப்படி இருந்தால் மானிட ஜென்மத்தால் மாற்ற முடியுமா என்ன?





No comments:

Post a Comment