Monday 16 September 2013

மனைவியின் காள சர்ப்ப தோஷம் கணவனை முடமாக்கும்

சில நாட்களுக்கு முன்னர் சிரம்பான் மாறனைப் பற்றி எழுதி இருந்தேன். அவர் என்னை சந்தித்த செய்தியை அவர் மனைவியிடம் கூறியிருக்கிறார்.

அவர் மனைவி என்னோடு தொலைபேசியில் உரையாடி ஜாதக விவரங்களை வினவினார். என் கருத்தில் கணிப்பில் அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

அதனால் என்னை நேரில் சந்திக்க வேண்டும் என்றும் வீட்டிற்கு வரமுடியுமா என்றும் கேட்டார். எத்தனையோ ஜோதிட விற்பன்னர்களை சந்தித்தவர்கள்... நம்மை பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார்களே என்ற மகிழ்ச்சி ஒருபுறம்...



மாறன் குடும்பத்திற்கு நம்மால் ஏதேனும் நன்மை ஏற்பட்டால் அது நட்புக்கு நன்றியாக அமையுமே என்ற நப்பாசை ஒரு புறம்... ஆகவே அடுத்த வாரத்தில் சந்திக்கிறேன் என உறுதி அளித்தேன்.

அதோடு உங்கள் ஜாதகத்தில் கண்டிப்பாக காளசர்ப்ப தோஷ அமைப்பு இருக்க வேண்டும் என குறிப்பிட்டேன். அவர் ஆச்சரியப்பட்டார்.

ஏற்கனவே ஜாதகம் பார்த்த இடத்தில் இது குறித்து குறிப்பிட்டதாகவும் திருக்காளகஸ்தி திருத்தளத்திற்கு சென்று வரும்படி அந்த ஜோதிடர் அறிவுறுத்தியதாகவும் சொன்னார்.

மேலும் நான் சொன்ன சில விஷயங்கள் என்பால் அவருக்கு பெருத்த ஈர்ப்பை ஏற்ப்டுத்தியது என நம்புகிறேன்.

அவர் பிறந்த நேரத்தையும் தேதியையும் சொன்னார்.கணித்துப் பார்த்ததில் நான் எண்ணியபடியே கடுமையான காலசர்ப்பதோஷ அமைப்பு.

திருமணப் பொருத்தத்தில் வசியமும் இல்லை... ரஜ்ஜும் இல்லை. ஆனால், குடும்ப வண்டி குடை சாயாமல் தட்டுத்தடுமாறி ஓடிக் கொண்டிருக்கிறது.

இவ்வளவு நாட்களில் இவர்களுக்கு விவாகரத்து நடந்திருக்க வேண்டும். அது நடக்க வில்லை.

அல்லது பொருளாதாரத்தில் மிகப்பெரிய சரிவை சந்தித்து குடும்பம் நசிந்து போயிருக்க வேண்டும். அதுவும் நடக்கவில்லை.

இன்னொரு வகையில் உயிர்ப்பாதிப்புகளை ஏற்படுத்தி குடும்பத்தைக் குலைத்திருக்க வேண்டும். அதுவும் நடக்கவில்லை.

இதற்கு பதிலாக முதுகுத்தண்டில் பாதிப்பை ஏற்படுத்தி அடுத்த அடி எடுத்து வைக்கவே பெரும் அவஸ்தைப்படும் நிலைக்கு ஆளாக்கி விட்டது காளசர்ப்பதோஷம்.

ஏற்கனவே பார்த்த ஜோதிடர் சொன்ன பரிகாரத்தை அலட்சியப்படுத்தாமல் செய்திருந்தால் பாதிப்பு அதிகமாக இருந்திருக்காது.

காலுக்கு வந்த ஆபத்து கட்டை விரலோடு போயிருக்கும். காலம் கடந்தால் என்ன கனிவோடு வேண்டினால் கடவுளின் அருள் கண்டிப்பாக கிட்டும்.

நண்பர் மாறனின் நோய்ப்பாதிப்பு அகலும். குடும்பத்தில் குதூகலம் பிறக்கும்.


1 comment:

  1. kalasarpa dosham pennuku irunthu paiyanuku illai endral iruvarum sernthu vala mudiyathu sernthu valnthal ore sandai sacharavuthan.karuthu verupadu irunthukonde irukum. pirkalathil sernthu valum patchathil husband job illamal avathipaduvar kanavanai seyalatra nilaiku thallividum kalasarba dosham neegal mele kuripitathu ellam unmai sathyamum kooda V.R.Ravichandran Chennai India

    ReplyDelete