Saturday 7 November 2015

மகனால் மகிழ்ச்சி... மனைவியால் அதிர்ச்சி....!

மலேசியாவில் வேலை பார்த்தவர். திருமணம் ஆன இரண்டு மாதங்களில் மலேசியாவுக்குத் திரும்பி விட்டார். அடுத்த ஆறு மாதத்தில் மீண்டும் ஊருக்கு வந்தார்.

இப்படியே நாலைந்து தடவை விமானத்தில் இங்கும் அங்கும் பறந்தார். ஆண்டுகள் நான்கு ஓடி விட்டன.ஆனால், அவருடைய மனைவி கருக் கொள்ளவில்லை.


இந்த ஏக்கம், ஊராரின் கேலிப் பேச்சு, உறவினர்களின் உச்சுக் கொட்டு இவையனைத்தும் இவரை திக்குமுக்காட வைத்தது.

மலேசியாவை காலி பண்ணிவிட்டு வந்து விட்டார். அடுத்த மாதமே அவர் மனைவி கர்ப்பமாகி விட்டார். ஒரு பக்கம் சந்தோசம். இன்னொரு பக்கம் கவலை.

வேலை இல்லாததால் கொண்டு வந்த பணம் மருத்துவமனைக்கும் மருந்துக்குமாகக் கரைந்து விட்டது. குடும்ப வாழ்க்கையிலும் குத்து வெட்டு. இப்போது அவரின் மனைவி நிறைமாதக் கர்ப்பிணி.

நொந்து போய் என்னிடம் வந்தார். ஜாதகத்தைப் பார்த்து விவரம் சொன்னேன். கல்யாணத்துக்கு முன்னாடி ஜோதிடம் பார்த்தோம். எல்லாரும் நல்லா இருக்குன்னுதான் சொன்னார்கள் என்றார்.

இப்போது போய் கேட்டுப் பாருங்கள் எல்லாரும் ஏறுக்குமாறாகச் சொல்வார்கள் என்று கூறினேன். அதை அவர் ஒப்புக் கொண்டார். இது நடந்தது ஒரு மாதத்திற்கு முன்னால்.

பின்னர் இரண்டு நாட்களுக்கு முன்னர் வந்தார். மனைவிக்கு இதுதான் மாதம். 27 ஆம் தேதிக்கு முன்னால் மூன்று நாட்களைத் தேர்வு செய்யும்படி மருத்துவர் கூறிவிட்டார். நல்ல நாள் பார்த்து சொல்ல முடியுமா எனக் கேட்டார்.

மேலும் என்ன பிள்ளை பிறக்கும். ஆண் பிள்ளை வேண்டும் என்பது எங்கள் ஆசை. அதையும் பார்த்துச் சொல்லுங்கள் ஐயா என்றார்.

எனக்கு இதில் உடன்பாடில்லை. இறைவனின் விருப்பப்படி நடக்கட்டும். எப்போது வலி எடுக்கிறதோ அப்போது அறுவைச் சிகிச்சை செய்யலாம். ஆண்பிள்ளையா பெண் பிள்ளையா என்பது முக்கியமல்ல. குழந்தை நல்ல முறையில் பிறக்க வேண்டும். அதுதான் முக்கியம் என்று சொன்னேன்.

அவர் விடவில்லை. நான் குறித்துக் கொடுக்கிறேன். ஆனால், அதற்கு முன்பாகவே குழந்தை பிறந்து விடும் பரவாயில்லையா என்று கேட்டேன்.

இருந்தாலும் அவர் பிடிவாதம் மாறவில்லை. அவர் விருப்பப்படி மூன்று நாட்களை தேர்வு செய்து கொடுத்தேன்.

நேற்று இரவு 7 மணி அளவில் அவர் எனக்கு போன் செய்தார். மனைவிக்கு வலி வந்து விட்டதாகவும் உடனே அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அச்சப்படத் தேவையில்லை. குழந்தை நல்லபடியாக பிறக்கும். மேலும் நீங்கள் கேட்டது கிடைக்கும். இது உறுதி என்று அவரிடம் சொன்னேன்.

இருப்பினும் என் வார்த்தையில் அவருக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை என்பது குரலில் தெரிந்த பயம் எனக்கு உணர்த்தியது.

இரவு சரியா 9 மணிக்கு என் கைத் தொலைபேசி கதறியது. எடுத்தேன். அந்த அன்பர்தான். ஐயா குழந்தை நல்லபடியாக பிறந்து விட்டது என்று சொன்னார்.

என்ன பிள்ளை என்று நான் கேட்கவில்லை. நீங்கள் சொன்னபடி ஆண்பிள்ளை ஐயா.. இரண்டு ஜோதிடர்கள் பெண்தான் பிறக்கும் என்றார்கள்.

காசு இல்லாத கவலையோடு அந்தக் கவலையும் என்னைப் பிடித்து ஆட்டியது. இப்போது இந்த ஒரு ஆசையையாவது இறைவன் நிறைவேற்றி வைத்தானே என்ற நிம்மதி ஏற்பட்டுள்ளது என மகிழ்ச்சியோடு சொன்னார்..

முந்தைய நிகழ்வும் இந்த சம்பவமும் அடுத்தடுத்த இரண்டு நாட்களில் நடந்தவை.

"சாமி... உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. வாழ்நாள் முழுவதும் இதை மறக்க மாட்டோம்" என ஆண்பிள்ளை பாக்கியத்தை அடைந்த இருவரும் சொன்னது இன்னும் என் காது மடல்களில் ஒட்டிக் கொண்டு இருக்கிறது.

எல்லாம் எம்பெருமான் விநாயகப் பெருமான், இளவல் முருகப் பெருமான் ஆகியோரின் அருட் கடாட்சம். பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க இந்த இருவரையும் பிரார்த்திக்கிறேன்.

No comments:

Post a Comment