Friday, 14 May 2010

உரிய நேரம் வந்து விட்டால் உயிர் போய்விடும்

அண்மையில் என்னை அதிர வைத்த ஒரு சோகச் செய்தி. கார் விபத்தில் ஒருவர் அடைந்த அகால மரணம். மலேசியாவில் ரவாங் என்ற இடத்தில் மிகப் பிரமாண்டமான துர்க்கை அம்மன் கோவில் இருக்கிறது. இதை நிர்மாணித்தவர் கணேசன் என்பவர். இவருடைய பற்றாளர்கள் இவரைக் கணேசனார் என்றே அழைப்பார்கள்.



நல்ல பண்பாளர். சிறந்த சமூக சேவையாளர். தேடி வருகின்ற பக்தர்களின் குறைகளை முன்னுணர்ந்து பரிகாரம் சொல்பவர். இவருக்கும் ஏராளமான பக்தர்கள் உள்ளனர். யாரும் விரல் நீட்டி குற்றம் சொல்ல முடியாதவர். குடும்பம், மனைவி பிள்ளைகள் என இல்லறத்திலும் நல்லறம் கண்டவர்.

இப்படிப்பட்டவர் தமிழ் நாட்டில் பொள்ளாச்சி அருகே காரில் போய்க் கொண்டிருந்த போது கார் விபத்துக்குள்ளாகி அந்த இடத்திலேயே மரணம் அடைந்து விட்டார். இந்த செய்தி என்னை உலுக்கி எடுத்து விட்டது. நல்லவர் கெட்டவர் என்பது நமனுக்கு தெரியாது. விழிப்போடு இருந்தாலும் உரிய நேரம் வந்து விட்டால் மாயையின்பால் சிக்கி உயிர் போய்விடும் என்பதற்கு கணேசனாரின் மரணம் உதாரணமாகி விட்டதோ என எண்ணத் தோன்றுகிறது.  அன்னாரின் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த இரங்கல்.

"நல்லவர்கள் எல்லாம் சீக்கிரமே சிவலோகம் சென்று விடுகிறார்கள்" என்று அவரின் சீடர்கள் கண்ணீர் விட்டு கதறிய காட்சி இன்னும் மனதைப் பிசைகிறது.

Tuesday, 4 May 2010

நித்தியானந்தா கால்பட்ட இடமெல்லாம் கருகிப் போன துயரம்




நேரம் சரியில்லை என்றால் சந்தனக் குழம்பில் குளித்தவன் சாக்கடையில் மிதப்பான்... கோபுரத்தில் குடியிருந்தவன் குடிசையில் கிடப்பான்....பல்லக்கில் போனவன் பாதம் நோக நடப்பான்... தங்கச் சிம்மாசனத்தில் இருந்தவன் தனிமைச்சிறையில் கழிப்பான்... இதற்கு நல்ல உதாரணம் நித்தியானந்த சாமியார்.

தமிழகத்தில் மருமகள்கள் பெரிதும் பயப்படுவது 'மாமியாருக்கா... சாமியாருக்கா... என பட்டிமன்றம் போட வைத்தவர். கடவுளைக் கண்டு விட்டதாக கதை விட்ட இந்த மனிதருக்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமராவைக் கண்டுபிடிக்க முடியாமல் போனது இறைவன் செலுத்திய ஈட்டி.

நான் இங்கே சொல்லப்போவது இவருக்கு நேர்ந்த அவலத்தை அல்ல. இவர் கால் பட்ட இடமெல்லாம் கருகிப் போன துயரத்தை. இவர் தன்னை கடவுள் என்றார். கோபியர் கொஞ்சும் ரமணன் என்றார். ரஞ்சிதாவோடு பாலியல் ஆராய்ச்சி செய்து வலிக்காமல் பிள்ளை பெறுவது எப்படி என அமெரிக்க மருத்துவர்களுக்கு ஆராய்ச்சிக் கட்டுரை அனுப்பினார். பெரிய பெரிய புள்ளிகளின் மனைவிகளைக் கூட ஒப்பந்தம் போட்டு ஒளிவிளக்கு ஏற்றினார்.

இவர் கால் பட்டாலே கஷ்டங்கள் மறைந்து போகுமாம். கை பட்டாலே துயரங்கள் தூள் தூளாகும். பார்வை பட்டாலே பாதங்கள் எல்லாம் பறந்து ஓடுமாம். இப்படித்தான் எல்லாரும் இவர் காலைக் கழுவி தண்ணீர் குடித்தார்கள். அப்படிப்பட்ட மகான் இப்போது ஏன் சிறையில் இருக்கிறார். இவரை நம்பியவர்களின் கதி என்ன?

இவரால் ஆசீர்வதிக்கப்பட்ட ரஞ்சிதா இப்போது ரகசிய ராத்திரி தேவதையாக இருக்கிறார். கட்டிய கணவனுக்கு கடுக்காய் கொடுத்தவர் போலீசாருக்கு போக்கு காட்ட முடியாமல் தவிக்கிறார்.

அமெரிக்காவில் இவருக்கு முதலில் அடைக்கலம் கொடுத்து விசாவுக்கெல்லாம் ஏற்பாடு செய்த ஒருவர் இப்போது பணத்தை இழந்து பட்டமரமாக நிற்கிறார். "சாமியாரோடு குடும்பம் நடத்திக் கொள்" என சொல்லி விட்டு இவருடைய மனைவி டாடா காண்பித்து போய் விட்டார்.

இந்த சாமியாருக்கு நேரடி முகவராக விளங்கிய ராகசுதா என்ற நடிகை திரை உலகத்திலும் சரி.... சொந்த வாழ்க்கையிலும் சரி....சொதப்பலாகத்தான் இருக்கிறாரே தவிர சுபிட்சமாக அல்ல. இவரும் வெளியே முகம் காட்ட முடியாமல் முக்காடு போட்டுக் கொண்டு திரிகிறார்.

தமிழகத்திலேயே நம்பர் 1 வார இதழ் குமுதம். இதில்தான் நித்தியானந்தாவின் "கதவைத் திறங்கள் காற்று வரட்டும்" என்ற ஆன்மீகத் தொடர் அலப்பறை பண்ணியது. இதைப் படித்து விட்டுத்தான் நித்தியானந்தாவின் கதவைப் பல பெரிய புள்ளிகளின் மனைவிகள் திறந்தார்கள்.

இப்போது அந்த குமுதம் பத்திரிகையில் பிரச்சினை.உரிமையாளருக்கு பதிப்பாளருக்கும் உள்குத்து நடந்து அண்மையில் வெளிச்சத்துக்கு வந்தது. குமுதம் நிர்வாகத்தில் பலகோடி நஷ்டம் என பகிரங்கமாகவே சொல்லப்படுகிறது. அங்கு பாலியல் கூத்துகளும் நடந்ததாக போலீசில் புகாரும் செய்யப்பட்டிருக்கிறது.

நித்தியானந்த இப்போது இருப்பது கர்நாடகாவில்.. அங்குள்ள சிறையில்தான் விசாரிக்கப்பட்டு வருகிறார். அங்கு பாரதிய ஜனதா ஆட்சி நடப்பதால் சாமியாருக்கு பெரிய பிரச்சினை இல்லை. தமிழ் நாட்டைப்போல தடியால் விசாரிக்க முடியாது. இந்தத் தைரியம்தான் சாமியாரை தெம்பாக வைத்திருக்கிறது.

ஆனால், கர்நாடகாவில்  பாரதிய ஜனதா ஆட்சிக்கே ஆப்பு வைக்கும் நிலை உருவாகி இருக்கிறது. உணவுத்துறை அமைச்சராக இருந்தவர்... நண்பனின் மனைவி மீது கை வைத்து விட்டார். அது சந்திக்கு வந்து அமைச்சர் பதவிக்கு சங்கு ஊதி விட்டது. இதற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் எடியூரப்பாவும் பதவி விலக வேண்டும் என ஆர்ப்பாட்டம் வெடித்திருக்கிறது.

சாமியாருக்கு ஜோதிடம்... தீர்க்க தரிசனம் தெரிந்திருந்தால் நிச்சயமாக இன்று ஏற்பட்டிருக்கும் அவலத்தின் அஸ்திவாரம் உணரப்பட்டிருக்க வேண்டும். அப்படி தெரிந்திருக்கவில்லை என்றால் ஊருக்கு உபதேசம் செய்யும் ஊதுகுழாய் மட்டுமே அவர். வேறு விஷேச ஆற்றல் என்பது ஏமாற்று வேலை தான்.

அவருக்கு தெரியாவிட்டாலும் அவருக்கு நெருக்கமான ஜோதிடர்களுக்கு அவரின் நடப்பு மகா தசை, புத்தி, கோச்சாரம் போன்றவை தெரிந்திருக்கும். அல்லது இது மாரகாதிபதி தசையாக கூட இருக்கலாம். அப்படிப்பட்ட தசை, புத்தி நடக்கும்போதுதான் மரணத்திற்கு பதிலாக இதுமாதிரியான அசிங்கத்தை தசா நாதனோ புத்தி நாதனோ  கொடுப்பான்.

ஏன் இதை மாரகத்துக்கு சமமாக சொல்கிறேன் என்றால்... புகழின் உச்சியில் இருந்து மக்களால் போற்றப்பட்ட ஒருவன், அதே மக்களால் காரி உமிழ்ந்து தூற்றப்பட்டால் இறந்து போனவனுக்கு இணைதான். மேலும் இது மாதிரி அசிங்கம் மானமுள்ள ஒருவனுக்கு நடந்திருந்தால் அவன் என்ன செய்திருப்பான். நாக்கைப் பிடுங்கிக் கொண்டு செத்திருப்பான்.

தூக்குப் போட்டு சாகலாம். மருந்து குடித்து சாகலாம். மாடியில் இருந்து குதித்து சாகலாம். அது என்ன நாக்கைப் பிடுங்கிக் கொண்டு... இந்த நாக்கு பேசிய தத்துவத்துவம் வேறு.. நடந்து கொண்ட முறை வேறு என்பதால்.

இது நமது கண்ணுக்கு தெரிந்தது. கண்ணுக்கு தெரியாமல் எத்தனையோ. எத்தனைதான் ஆன்மீக அறிவு இருந்தாலும் காவி வேட்டி நடத்தி கண்காட்சி நடத்தினாலும் கையை உயர்த்தி காலை தூக்கி ஆசீர்வாதம் செய்தாலும் இறைவன் முடிவு எடுத்து விட்டால் நித்தியானந்தா என்ன அவரை விட ஆயிரம் மடங்கு செல்வாக்கு மிக்க சுத்தியானந்தாவாக இருந்தாலும் சும்மா... சும்மா... தான்.

Wednesday, 6 January 2010

எத்தனை மலர்கள் தாவும் பட்டாம்பூச்சி

நேற்று ஒரு பெண்ணும் ஆணும் என்னிடம் திருமணப் பொருத்தம் பார்க்க வந்தாங்க. பொண்ணுக்கு பூச நட்சத்திரம். ஆணுக்கு அசுவினி நட்சத்திரம்.

பத்துக்கு ஆறு பொருத்தம் சரியாக இருக்கிறது என்பதால் திருமணம் முடிக்கலாம் என்று சொன்னேன்.




யோனிப் பொருத்தம் மத்திபமாக இருக்கிறது. வசியப் பொருத்தம் இல்லை. ஆகவே சில விஷயங்களில் அனுசரித்துப் போக வேண்டும் என சொன்னேன். அந்த ஆடவரிடம் சில ஆலோசனைகளையும் கூறினேன்.

அப்போது இடைமறித்த அந்தப் பெண், " இவர் மாப்பிள்ளை இல்லை. அவர் வேறு ஆள்" என்றார்.

எனக்கு சங்கடமாக போய்விட்டது.

" நீங்கள் பேசிக் கொண்ட விதம்... நடந்து கொண்ட முறை... ஆகியவற்றை வைத்து தப்பாக நினைத்து விட்டேன்" என சொன்னேன்.

" எதற்காக வருத்தப்படுகிறீர்கள். இவர் என் காதலர்..ஐந்து வருடமாக பழக்கம். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. அதனால் இவரைத் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. இருந்தாலும் இதுவரை கணவன் மனைவியாகதான் வாழ்ந்து வருகிறோம். இவர்தான் வேறு ஒரு ஆளைத் திருமணம் செய்யும்படி வற்புறுத்துகிறார்" என பதட்டப்படாமல் கூறினார்.

"இல்லை அம்மா, யோனிப் பொருத்தம் குறைவாக இருப்பதாலும் சில கிரகங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாலும் தாம்பத்திய வாழ்க்கையில் சில பிரச்சினைகள் வரலாம் என்பதற்காத்தான் சொன்னேன்" என குறிப்பிட்டேன்.

" அதைப் பற்றி கவலை இல்லை... எனக்கு எப்போது வேண்டுமோ அப்போது சந்தோசம் கொடுக்கத்தான் இவர் இருக்கிறாரே" என அதிரடியாக ஒரு பதிலைச் சொன்னார். நான் ஆடிப் போய் விட்டேன்.

"அப்படியானால் திருமணத்துக்கு பின்னரும் உங்கள் உறவு தொடருமா" என கேட்டேன்.

"அப்கோர்ஸ்... இவரை மறக்க முடியுமா?" என ஒரு குண்டைத் தூக்கி போட்டாள்.

"சரி அம்மா... உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்... ஒரு காலத்தில் இப்படி நடந்து கொண்டால் அது பெரிய பாவம் என கருதப்பட்டது. ஆனால்,  நாசமாய்ப் போன நாகரீக வளர்ச்சி இதெல்லாம் சகஜமப்பா என நடக்கச் சொல்கிறது. போய் வாருங்கள்" என அனுப்பி வைத்தேன்.

இப்படியும் சிலர் இருக்கிறார்களே என ஆச்சரியப்பட்டேன்.

 ஆனால், வாடகைக்கு மனைவி என்ற உண்மைச் சம்பவத்தை ஜூனியர் விகடனில் படித்தேன்.

அதில் நிருபருக்கும் ஒரு குடும்பப் பெண்ணுக்கும் நடக்கும் உரையாடலை அப்படியே வெளியிட்டு இருந்தார்கள்.

இப்படியும் இருக்கிறார்களே என்னிடம் பொருத்தம் பார்க்க வந்த ஜோடியைப் பார்த்து ஆச்சரியப்பட்ட என்னை இப்படி ஏராளமான பேர் இருக்கிறார்கள் என சாட்டையால் அடித்தது போல் சொன்னது அந்த உண்மைச் சம்பவம்.

ஒரு பாப கிரகமும் ஒரு சுப கிரகமும் இணைந்து களத்திர ஸ்தானத்தில் இருந்தால் (தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்பதால் கிரகங்களின் பெயரைக் குறிப்பிடவில்லை) கட்டிய கணவனே காசுக்காக தன்னுடைய மனைவியை மாற்றானுடன் அனுப்பி வைப்பான் என புலிப்பாணி கூறுகிறார்.

ஆனால் அது இந்த அளவுக்கு இருக்குமா என்பதை எண்ணிப் பார்க்க மனம் கூசுகிறது. தயவு செய்து நீங்களும் அதைப் படித்துப் பாருங்கள். உலகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்பதை உணருவீர்கள்.

Tuesday, 5 January 2010

பொறுத்து இருங்கள்... புரிந்து கொள்வார்கள்...




அன்பு நண்பரே...
உங்கள் ஜாதக பலன் முழுவதையும் முகப்புத்தகம் (face book) ஏற்றுக் கொள்ளாது என்பதால் நவக்கிரக நாட்டியத்தில் விளக்கி இருக்கிறேன். படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.  சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள்.

உங்களுடைய லக்கனம் மிதுனம். ராசி ரிஷபம். நட்சத்திரம் மிருகசீரிடம் 2-ஆம் பாதம். நீங்கள் பிறந்த நேரம் இரவு 11 மணியாக இருக்க வேண்டும். மிருகசீரிடம் இரண்டாம் பாதம் அடிப்படையில் கணித்துப் பார்த்தபோது அந்த நேரம்தான் வருகிறது.

பொதுவாகப் பார்த்தால் உங்கள் ஜாதகம் சிறப்பாகவே இருக்கிறது. உங்களுக்கு அமலா யோகம், வசுமதி யோகம், நீசபங்க யோகம் போன்ற யோக அமைப்புகள் இருக்கின்றன.

அதோடு சதாசஞ்சார யோக அமைப்பும் இருக்கிறது. இது நாடோடி வாழ்க்கையை ஏற்படுத்தக் கூடியது. நீங்கள் எதிலும் நேர்மையைக் கடைப்பிடிப்பவராக இருப்பீர்கள். சங்கீதம் நாட்டியம் போன்ற துறைகளில் ஆர்வம் அதிகமாக இருக்கும்.

மகரம் 8-ஆம் வீடாக இருப்பது வெளிநாட்டு வாழ்க்கையை அமைத்துக் கொடுத்திருக்கிறது. உங்கள் ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் பாதிக்கப்பட்டிருக்கிறது. தாயாருக்கு உரிய ஸ்தானத்தில் ராகு இருப்பது தாயார் சம்பந்தப்பட்ட உறவை பாதிப்படையச் செய்திருக்கிறது. தந்தையாருக்கு உரிய ஸ்தானம் சனி வீடாக இருப்பதும் சனி சூரியன் வீட்டில் அமர்ந்திருப்பதும் சூரியன் பாதகமான இடத்தில் நீசபங்கம் பெறுவதும் பெற்றோர்களுக்கும் உங்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தி இருக்கக் கூடும்.

மேலும் மிருகசீரிடம் 2-ஆம் பாதத்துக்கு அதிபதி புதன். உங்களுக்கு புத்தி கூர்மை. இரக்க மனப்பான்மை போன்றவற்றை புதன் கொடுப்பார். அதே நேரத்தில் முன்கோபம் அதிகமாக வரும். அதைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதற்கு முன்னர் ராகு தசை நடந்தது. இந்தக் காலகட்டத்தில் குடும்ப உறவு சீர்குலைந்து போயிருக்கும். இப்போது குரு மகா தசை நடக்கிறது.2012- 5-ஆம் மாதம் வரை பாதகமான நிலைதான்.

அதன்பிறகு வருகின்ற சூரிய புத்தியில் அதாவது 2013- 3-ஆவது மாதத்திற்கு பிறகு பெரிய மாற்றத்தை காண்பீர்கள். அதன் பின்னர் குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள்.

போன ஜென்ம கர்மா பாதிக்கப்பட்டிருந்தால் பெற்றோர்களின் அன்பு கிடைப்பது அரிது. அந்த நிலை தான் உங்களுக்கும். உணவுப் பழக்கங்களில் கட்டுப்பாடு தேவை. வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் எச்சரிக்கையாக இருங்கள்.

உங்களால் இயன்ற அளவு ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யுங்கள். வரும் காலத்தில் நல்லதே நடக்கும்.

Monday, 28 December 2009

அண்ணன் என்னடா... தங்கை என்னடா... அறிவியல் வளர்ந்த உலகத்திலே.

சாலமன் அரசவைக்குத்தான் விசித்திரமான வழக்குகள் வருவது வழக்கமாம். அதுபோல என்னிடம் விசித்திரமான ஒரு பிரச்சினை வந்தது. ஒரு நாள் இரண்டு ஜாதகங்களை எடுத்துக் கொண்டு ஒருவர் என்னிடம் வந்தார்.

"இவர்கள் என் பிள்ளைகள். இவர்களின் எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். மூத்தவன் தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை பார்க்கிறான். இளையவள் ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல பதவியில் இருக்கிறாள்" என்றார்.




இருவரின் ஜாதகத்தையும் பார்த்தேன். பிறகு அந்தப் பெரியவரிடம் கேட்டேன். " சரி... இப்போது நீங்கள் என்ன கேட்க விரும்புகிறீர்கள் என தெளிவாக சொல்லுங்கள். அதற்கு சாத்தியம் இருக்கிறதா என பார்த்துச் சொல்கிறேன்" என கூறினேன்.

" இவர்கள் இரண்டு பேருமே கல்யாணம் செய்து கொள்ள மறுக்கிறார்கள். எவ்வளவோ சொல்லிப் பார்த்து விட்டேன். கேட்க மாட்டேன் என்கிறார்கள். இவர்களுக்கு திருமண யோகம் இருக்கிறதா" எனக் கேட்டார்.

திருமணத்திற்கு பாதகமான வகையில் எந்தக் கிரகமும் அமைந்திருக்கவில்லை. சுகஸ்தானமும் அயன சயன ஸ்தானமும் நன்றாக இருந்தன. காம வேட்கையை அதிகரிக்கும் வகையில் சில கிரகங்கள் வலிமை அடைந்திருந்தன. சந்நியாச யோகத்தைத் தருகின்ற வகையில் எந்தக் கிரகமும் இல்லை.

இது குறித்து இவரிடம் பேசி பயனில்லை. ஆகவே பிள்ளைகளை அழைத்து வர முடியுமா என அவரிடம் கேட்டேன். அழைத்து வருவதாக சொல்லி விட்டு சென்றவர் அடுத்த வாரத்தில் வந்தார்.

இருவரிடமும் பேசினேன். இருவருமே திருமணம் வேண்டாம் என சொன்னார்கள். அதே நேரத்தில் அவர்களிடம் ஆன்மீக நாட்டமோ பொதுச்சேவை ஆர்வமோ இல்லை என்பதும் தெரிந்தது. வேறு கோணத்தில் பேச்சைத் திருப்பினேன்.

அண்ணனை விட்டு விட்டு போக மாட்டேன். திருமணம் என்ற பெயரில் தங்கையைப் பிரிய மாட்டேன் என்பதுதான் இருவரின் இறுதிப் பதிலாக இருந்தது. இவர்களின் பாச உணர்ச்சி ஆரம்பத்தில் என்னை வியக்க வைத்தது. இருந்தாலும் அது மட்டுமே காரணமாக இருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தேன்.

பையனையும் அப்பாவையும் வெளியே இருக்கச் சொல்லி விட்டு பெண்ணிடம் சில கேள்விகள் கேட்டேன். எதிர்கால பாதிப்புகளை சரியான கோணத்தில் எடுத்துச் சொன்னால் ஆண்களை விட பெண்கள்தான் எளிதில் புரிந்து கொள்வார்கள் என்பது என் அனுபவத்தில் கண்ட உண்மை.

இது தான் அவர்கள் கதை...

இவர்கள் இருவரும் சின்ன வயதாக இருக்கும்போதே அம்மா இறந்துவிட்டார். இவருடைய தகப்பனார் பாசத்தைக் கொட்டி வளர்த்து படிக்க வைத்தார். தாயின் அன்பு கிடைக்காததால் அண்ணனும் தங்கையும் ஒருவருக்கொருவர் தாயாக மாறி அன்பைப் பொழிந்தனர்.

ஒரே தட்டில் சாப்பிட்டனர். ஒரே படுக்கையில் படுத்தனர். வயது ஆக ஆக பாலியல் மாற்றங்கள் உருவாகின. இருந்தாலும் இவர்கள் அன்பில் மாற்றம் இல்லை. தகப்பனாரும் பிள்ளைகளின் அன்பைக் கண்டு பூரிப்பில் இருந்தார்.

ஒரு நாள் குளித்து விட்டு அறைக்குள் ஆடை மாற்றிக் கொண்டு நின்றிருக்கிறாள் தங்கை. ஏதோ ஒரு சாமானை எடுக்க உள்ளே நுழைந்த அண்ணன் நிர்வாணக் கோலத்தில் நின்ற தங்கையைப் பார்த்திருக்கிறான். என்ன இருந்தாலும் அவன் ஆண்பிள்ளை அல்லவா.

பட்சம் வழக்கறியாது... நித்திரை சுகமறியாது..... பிச்சை தரமறியாது.... இச்சை முறையறியாது.... என்ற முன்னோரின் வாக்குப்படி காம வயப்பட்ட அண்ணன் ஒரு கணம் ஆடாமல் அசையாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்திருக்கிறான். அடுத்த கணம் புலி மாதிரி பாய்ந்து அவளை கட்டிப் பிடித்திருக்கிறான்.

எதிர்த்து போராட வேண்டிய தங்கை இணங்கிப் போனாள். இருவரும் படுக்கையில் சாய்ந்தனர். சில நிமிடங்களிலேயே எல்லாம் முடிந்தது. இது வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் தொடர்ந்தது. திருமணம் செய்து கொண்டால் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து போக வேண்டும். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள சட்டமும் சமுதாயமும் தடையாக நிற்கும்.

படித்தவர்கள் அல்லவா... இதைத் தீர்க்கமாக தெரிந்து கொண்டு திருமணத்தை மறுத்து வந்திருக்கிறார்கள். குடும்ப வாழ்க்கை என்ற பெயரில் வேறு வேறு இடங்களில் வாழ்வதை அவர்களால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

இந்த உண்மையை என்னிடம் கூறிய போது அவள் பயமோ பதட்டமோ அடையவில்லை. மிக சாதாரணமாகவே பேசினாள். "இது என்னுடைய அப்பாவுக்கோ மற்றவர்களுக்கோ தெரியக்கூடாது. தெரிந்தால் என் அப்பா தாங்க மாட்டார். உங்களிடம் சொன்ன இந்த விஷயத்தை வெளியே சொல்ல மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நீங்கள் அப்படிப்பட்ட ஆள் இல்லை என்பதை பார்த்த மாத்திரத்திலேயே புரிந்து கொண்டேன்" என்று சொல்லி என்னையும் அதிர வைத்து விட்டாள்.

இது குறித்து அவளிடம் எந்த அறிவுரையும் சொல்லவில்லை. அனைத்தையும் நன்றாக தெரிந்து கொண்டே இந்தக் காரியத்தில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் மீது எந்தக் கருத்தையும் திணிக்க முடியாது. அப்படிச் செய்தாலும் பயனில்லை என்பதை தெளிவாக உணர்ந்து கொண்டேன்.

அவர்களுடைய தகப்பனாரை வரவழைத்து " இன்னும் சில ஆண்டுகளுக்குள் உங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் நடக்கும். அதுவரை அவசரப்பட வேண்டாம். பிள்ளைகள் போக்கிலேயே விட்டு விடுங்கள்" என சொல்லி அனுப்பி வைத்தேன்.

இப்படிச் சொல்லும்போது என் இதயத்தில் இனம் தெரியாத வலி.... நான் செய்தது சரியா... தவறா...என்னை நானே அலசிப் பார்த்தும் விடை கிடைக்கவில்லை.

மாமியாரைக் காதலிக்கும் மருமகன்

இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு பெண்மணி என்னை வந்து சந்தித்தார். அவருக்கு 35 வயது இருக்கும். இரண்டு பிள்ளைகள். மூத்தவள் பெண். இளையவன் ஆண். அவர்கள் வசிப்பது ஒரு அடுக்குமாடி வீடு.

கணவர் காலையில் ஆறு மணிக்கே வேலைக்கு போய் விடுவார். இவர் இல்லத்தரசியாக இருப்பதால் மீண்டும் படுக்கச் செல்வார். அப்படி படுத்து இருக்கும்போது யாரோ ஒருவர், இவர் பக்கத்தில் படுப்பது போலவும் வலுக்கட்டாயமாக உடலுறவு கொள்வது போலவும் இருக்கிறது என என்னிடம் சொன்னார்.



இது இவருடைய மனப்பிரமை என நினைத்து சில அறிவுரைகளைச் சொல்லி அனுப்பி வந்தேன். இரண்டு நாள் கழித்து மீண்டும் வந்தார். இன்றும் எனக்கு அந்த சம்பவம் நடந்தது. அது உண்மையில் நடப்பது போலவே இருக்கிறது என்று சொன்னார்.

அப்போதும் அவருக்கு ஆறுதலான சில விஷயங்களைச் சொல்லி அனுப்பி வைத்தேன். ஒரு வாரம் கழித்து வந்தார். குளிக்கும்போது என் உடம்பில் ஒரு பாம்பு வந்து சுற்றிக் கொள்கிறது. அது சில்மிஷமான காரியங்களைச் செய்கிறது என கூறினார்.

என்னடா இது சந்திரமுகி படம் போல இருக்கிறதே என நினைத்தேன். இனிமேலும் வெற்று வார்த்தைகள் பயனளிக்காது என எண்ணி என்னிடம் இருந்த அழகர்கோவில் தீர்த்தத்தைக் கொடுத்து வீடு முழுவதும் தெளிக்கச் சொன்னேன்.
அதற்கு பின்னர் அவர் வரவில்லை. அண்மையில் என்னைத் தேடி வந்தார். அவர் முகம் வெளிறிப் போய் இருந்தது. இப்போது இன்னொரு புதுக் கதை ஒன்றைச் சொன்னார்.

" என் மகளுக்கு 16 வயது ஆகிறது. ஒரு பையன் அவளைக் காதலிக்கிறான். அவன் முகத்தைப் பார்க்கும்போது நான் கனவில் பார்க்கும் பாம்பைப் போலவே இருக்கிறது. என்னுடைய கணவருக்கு அவனைப் பிடிக்கவில்லை. வீட்டிற்கு வரக்கூடாது என கண்டிப்பாக சொல்லி விட்டார்" என கூறினார்.

" இது நல்ல விஷயம்தானே... இதில் என்ன பிரச்சினை இருக்கிறது" என நான் சொன்னேன்.

" ஐயா... என்னால் அவனைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. என் கணவர் இல்லாத நேரத்தில் நானே போன் செய்து வரச் சொல்கிறேன். என் மகளும் பள்ளிக்கூடத்துக்கு போய் விடுவாள். எனக்கும் அவனுக்கும் முன் ஜென்மத்தில் தொடர்பு இருக்கிறதா என பார்த்துச் சொல்லுங்கள்" என கேட்டாள்.

அந்தப் பெண்ணின் பிறந்த நேரத்தை வாங்கிக் கொண்டு மறுநாள் வந்து பார்க்கும்படி அனுப்பி வைத்தேன். எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. ஆனால், நெஞ்சுக்குள் ஒரு நெருடல். இதையும் தாண்டி ஏதாவது இருக்கக்கூடுமா என என் உள்ளுணர்வு சொல்லியது.

மறுநாள் நான் சொன்ன நேரத்துக்கு வந்தாள். நான் நேரடியாகவே விஷயத்துக்கு வந்து விட்டேன்.

" அம்மா... நீ அவனைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை என்கிறாய். நான் கேட்கும் கேள்விகளுக்கு மறைக்காமல் உண்மையைச் சொல்ல வேண்டும். அப்போதுதான் முன் ஜென்மத் தொடர்பு பொருந்துகிறதா என பார்க்க முடியும்" என சொன்னேன்.

அவளுடைய முகத்தில் சின்னக் கலவரம். அதை நான் கவனிக்கத் தவறவில்லை. " சரி கேளுங்கள்" என சொன்னாள்.

"உன் மகளின் காதலன் உன்னைத் தொட்டிருக்கிறானா?'

" ஆம் ஐயா..."

" கட்டிப் பிடித்து இருக்கிறானா..."

கொஞ்ச நேரம் தரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பின்னர் ஆமோதிப்பதைப் போல் தலையை ஆட்டினாள்.

" என் கண்ணைப் பார்.... நான் சொல்வது சரியா என உன் மனதைக் கேள். ஒத்துக் கொள்வதாக இருந்தால் மேலே பேசலாம். இல்லை என்றால் நடையைக் கட்டு" எனக் கூறிவிட்டு பேச்சைத் தொடர்ந்தேன்

"அவன் உன்னைக் முதலில் கட்டிப் பிடித்தான்.அது உனக்கு கூச்சமாக இருந்தது. மகளின் காதலன் இப்படிச் செய்கிறானே என மனம் சஞ்சலப்பட்டது. நாளடைவில் உன் மனமும் உடலும் அதை ஏற்றுக் கொண்டது.

ஒரு நாள் சரியான சந்தர்ப்பத்தில் உன்னை அவன் படுக்கையில் பிடித்து தள்ளி விட்டான். முதலில் நீ முரண்டு பிடித்தாய். பின்னர் இணங்கி விட்டாய். இப்போது அடிக்கடி அந்த சுகம் கேட்கிறது.

மகளின் காதலனோடு இப்படி நடப்பது தவறு என உன்னுடைய அறிவு சொல்கிறது. ஆனால் பாழாய்ப் போன ஆசை அதை ஜெயித்து விடுகிறது. இப்போது உன் கணவரின் கண்டிப்பால் அவன் வீட்டிற்கு வர முடியவில்லை. அதே நேரத்தில் உன்னால் அந்த சுகத்தை அடையாமல் இருக்க முடியவில்லை. உன் மனமும் உடம்பும் கிடந்து தவிக்கிறது. இது சரியாக இருந்தால் அதற்கான ஆலோசனை சொல்கிறேன். இல்லை என்றால் மாற்று ஏற்பாடு செய்யலாம்" என சொன்னேன்.

அவளுடைய கண்களில் இருந்து பொல பொல வென கண்ணீர் கொட்டியது.

" நீங்கள் நேரில் பார்த்ததைப் போல் அப்படியே சொல்லி விட்டீர்கள். இதில் இருந்து தப்பிக்க வழி சொல்லுங்கள் ஐயா" என அழுது கொண்டே கேட்டாள்.

என் நண்பர் ஒருவர் மன நல மருத்துவராக இருக்கிறார். அவரைப் போய் பார்க்கும்படி அந்தப் பெண்ணை அனுப்பி வைத்திருக்கிறேன்.

இதைப் படித்தவுடன் 'அந்தப் பெண் இப்படி செய்யலாமா...' என கோபப்பட்டு விட வேண்டாம்.

அந்தச் சுகம் மட்டுமே பிரதானம் என எண்ணி இருந்தால் என்னைப் பார்க்க வந்திருக்க மாட்டாள். அதே வேளையில் அந்தப் பெண் செய்வதை நியாயப்படுத்துவதும் முட்டாள்தனம்.

அவளுடைய ஜாதகத்தைப் பார்த்தேன். அவளைத் தடம்மாறச் செய்கின்ற அளவுக்கு சில கிரகங்கள் கெட்டுப் போய் இருந்தன. அதை விளக்கிச் சொல்வது சரியாக இருக்காது என நினைக்கிறேன்.

இந்த பதிவூட்டத்தைப் படிக்கும் ஆண்களும் பெண்களும் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். காலம் வெகு வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. கோளாறான பாலியல் பழக்கங்கள் மேலை நாட்டில் இருந்து இறக்குமதியாகின்றன.

நாக்கு ருசிக்காக பல உணவுக்கடைகளில் ஏறி இறங்குவதைப் போல உடல் ருசிக்காக நமது பண்பாட்டுக்கு ஒவ்வாத பல காரியங்களை இளைஞர்களும் யுவதிகளும் செய்கிறார்கள்.

 இது ஆரம்பத்தில் இன்பத்திலும் இன்பமாக இருக்கலாம். குறிப்பிட்ட வயது கடந்த பின்னர் தீர்க்க முடியாத துன்பத்தை கொண்டு வந்து விட்டு விடும் என்பதை மறந்து விடாதீர்கள்.

Friday, 18 December 2009

காலம் மாறும். கவலை தீரும்.

பிரான்சு நாட்டில் வசிக்கும் அன்பர் ஒருவர் என் மின்னஞ்சலுக்கு தகவல் அனுப்பி இருந்தார். அந்த தகவலின் சாரத்தை இங்கே தந்திருக்கிறேன்.

vanakam sir
mikavum nandri sir
naan srilanka naadai pirapidamaka kondavan. ippoluthu france (europe) ennum naadil vasikiren. ennakku nalla kalam endu sollukirarkal but appadi nalla kalam ethuvum nadakavillai maaraka thaan nadakirathu.
ennathu yathakathil entha kalam nalla kalam ? enna tholil seiyalam? business sari varuma ? kalyanam entha vayathil eppoluthu ? kadan pirachani thiruma? ennathu ayul matrum health? ennaku politics , cinema sammanthama full intrest irukku ithukal ennaku sari varuma ? appa, amma health ? ennudaya yathakathil  panam sampathikka mudiuma ? aakiyavatrai kanithu kurunkal pls. unkaludaya telephone number kodukka mudiuma thodarpu kolvathatku.....
mikavum rompa rompa nadri sir.


அருமை நண்பர் சுகிதாசுக்கு என்றும் நலமே வளரட்டும்.

" என்ன... என்ன.... வேலைப் பிடித்ததும் என்ன..." என்ற கேபி சுந்தராம்பாள் பாடலைப்போல பல கேள்விகளைக் கேட்டிருக்கிறீர்கள்.




உங்கள் ஜாதக பலனைச் சொல்வதற்கு முன்னால் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். ஜாதகம் என்பது வழிகாட்டி மட்டுமே. அதோடு உழைப்பும் சேர்ந்தால்தான் உயர்வு கிட்டும்.

உங்கள் நட்சத்திரம் பூசம் 4-ஆம் பாதம், ராசி கடகம், லக்கனம் கன்னி.
நீங்கள் பிறந்த போது சனிமகாதசை கர்ப்பச் செல் நீக்கி எட்டு மாதங்கள். ஆயுளைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஆயுள் ஸ்தானாதிபதி லக்கனத்தில் இருப்பதால் ஆயுள் தீர்க்கம் என்று குறிப்பிடலாம்.
கலைக்கு காரனான சுக்கிரன் 4-ஆம் வீட்டில் இருக்கிறான். நடிப்புகாரகன் செவ்வாய் கேந்திரத்தில் இருக்கிறான். ஆகவே நீங்கள் துணிந்து நாடகம், திரைப்படம் போன்ற துறைகளில் உங்கள் கலைத்திறமையை வெளிப்படுத்த களம் இறங்கலாம்.

வீடு, இடம் வாங்கி விற்பது போன்ற தொழில் உங்களுக்கு லாபத்தை தரும். உணவகத் தொழிலும் லாபத்தைத் தரும். மொத்தத்தில் வார்த்தை ஜாலத்தால் நடக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றது.

கடந்த ஏழரை ஆண்டுகளாக ஏழரைச்சனியின் பிடியில் சிக்கி சின்னா பின்னமாகி இருக்கிறீர்கள். அதனால் கடன் தொந்தரவுகள் இருக்கத்தான் செய்யும். அவை மெல்ல மெல்ல விலகும்.
மாதுரு ஸ்தானத்தில் சர்ப்ப கிரகம் நிற்பதால் தாயாருக்கு ஆரோக்கியக் குறைவு இருக்கும். இது போன்ற ஜாதக அமைப்பு கொண்ட பலர் தாயைப் பிரிந்தோ இழந்தோ வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

உங்களுக்கு செவ்வாய் தோஷ அமைப்பு இருக்கிறது. செவ்வாய் லக்கனத்தில் இருப்பதோடு மட்டும் அல்லாமல் களத்திர ஸ்தானத்தையும் பார்க்கிறார். இதற்கு நீங்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.
இது போன்ற அமைப்புக்கொண்டவர்கள் ஏற்கனவே காதலில் வீழ்ந்து இருப்பார்கள். அதோடு தோல்வியும் கண்டிருப்பார்கள். உங்களைப் பொறுத்தவரை 30-க்கு மேல் திருமணம் நடந்தால் நல்லது..
சனிபகவானும் லக்கனத்தில் இருந்து களத்திர ஸ்தானத்தைப் பார்ப்பதால் திருமணத்தில் அதிகமான பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டி வரும்.

லக்கனாதிபதி சர ராசியில் இருந்து பாப கிரகங்கள் சேர்க்கை ஏற்பட்டிருப்பது உங்களை ஒரு நிலையில் இருக்க விடாது. இதற்கு சதா சஞ்சார யோகம் என்று பெயர். அதனால் நாடோடி வாழ்க்கை அமைவதும் ஏற்ற இறக்கமான பொருளாதார சூழல் ஏற்படுவதும் தவிர்க்க முடியாதது.

6-ஆம் அதிபதி லக்கனத்தில் இருப்பது எத்தகைய எதிர்ப்பையும் தாண்டி வெற்றி கொள்ள வைக்கும். இப்போது உங்களுக்கு சுக்கிரமகா தசை நடக்கிறது. இதில் 2016- ஆம் ஆண்டு வரும் வியாழபுத்தியில் நீங்கள் நினைக்கின்ற லட்சியத்தை அடைவீர்கள். 2013-ஆம் ஆண்டில் உங்கள் எதிர்கால முன்னேற்றத்திற்கான வழிகளைக் கண்டறிவீர்கள்.


"நமக்குக் கீழே உள்ளவர் கோடி.... நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு" என்பது கவியரசர் கண்ணதாசனின் மெய்ஞான வரிகள்.... ஒரு காலத்தில் உயர்ந்த நிலையை அடைவீர்கள். காலம் மாறும். கவலை தீரும். மனக்குழப்பத்தை அகற்றி விட்டு முன்னேற்றப்பாதைக்கு வழித்தடத்தை அமைக்க முயற்சி செய்யுங்கள்.