Monday 21 September 2015

முதலிரவுக்கு ஒத்திகை.. முறிந்து போன வாழ்க்கை...!

"நீங்க செஞ்சது நியாயமா.. என்னை நம்ப வச்சு கழுத்த அறுத்திட்டேங்களே..கமல்"

"என்னை மன்னிச்சிடு சுதா... மனசாற சொல்றேன். உன்ன ஏமாத்தனுமுன்னு நினைக்கல. நாம சேந்து வாழ கொடுத்து வைக்கலை"


"பொய்... அப்பட்டமான பொய்.. மனச்சாட்சி இல்லாத மனுசன் நீங்க.. நல்லவன் மாதிரி நடிச்சு... என்னோட வாழ்க்கையைக் கெடுத்த நீங்க நல்லாவே இருக்க மாட்டீங்க"

"நடந்தது நடந்து போச்சு. இதை கெட்ட கனவா நினைச்சு மறந்திடு... உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக்க. என்னை தொந்தரவு பண்ணாதே.."

"யோய் நீயெல்லாம் மனுசனா.. இப்ப நான் உனக்கு தொந்தரவா.. அன்னைக்கு நீயில்லாட்டி எனக்கு வாழ்க்கையே இல்லைன்னு சத்தியம் பண்ணினியே. அது உன்னோட நெஞ்சில நிக்கலையா.."

"என்ன... திரும்பத் திரும்ப அதையே சொல்லிக்கிட்டு இருக்கே... அப்புறம் என் மண்டைக்கு ஏறிடும் பாத்துக்க."

"ஏன் ஏறாது. உன்னைய பாக்காம ஒரு நிமிசம் கூட இருக்க முடியலைன்னு என்னைய உருக வச்சு நயவஞ்சகமா வீட்டுக்கு கூப்பிட்டு கெடுத்திட்டு இப்ப நல்லவன் மாதிரி பேசுறீங்க."

"நான் மட்டுமா தப்பு செஞ்சேன். நீயும்தானே சம்மதிச்சே.. அப்ப உனக்கு புத்தி எங்க போச்சு."

"ஏன் சொல்ல மாட்டீங்க... உன்னைய கல்யாணம் பண்ணிக்க போறவன் கேட்கிறேன். முதலிரவு எப்படி இருக்குமுன்னு ஒத்திகை பாப்போம். அப்பத்தான் ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்க முடியுமுன்னு சொன்னதாலதானே உங்க ஆசைக்கு நான் இணங்கினேன்."

"அறிவு கெட்டவளே.. நல்ல சாப்பாடு சாப்பிட ஆம்பிள ஆயிரம் பொய்யைச் சொல்வான். பொட்டச்சி நீதாண்டி பொத்தி வச்சிருக்கணும். அன்னைக்கு கதவத் துறந்து விட்டு காத்தாடக் கிடந்திட்டு. இன்னைக்கு வந்து கத்துற"

" உலகத்திலேயே உன்னைய மாதிரி அழகி இல்லை. உன்னை தொடுறதுக்கு நான் கொடுத்து வச்சவன்னு சொல்லி.. ஒவ்வொரு உடுப்பாக கழட்டி என்னைக் கெடுத்துட்டு இப்ப வியாக்கியானம் பேசுற. நீ எந்தக் காலத்திலும் உருப்பட மாட்டே.. என் சாபம் உன்னைச் சும்மா விடாது"

"பத்தினி சாபம் பலிச்சிடப் போகுது. போடி போக்கத்தவளே... இதுக்கு மேலே ஒரு வார்த்தை பேசுனே.. நடக்கிறதே வேற.. நாம் ரெண்டு பேரும் சல்லாபமா இருக்கிற பொல்லாத வீடியோவை இண்டர்நெட்டில போட்டேன்னு வச்சுக்க. உன் குடும்பமே விஷத்தக் குடிச்சுட்டு விண்ணுலகம் போக வேண்டியதுதான்."

கண்ணீர் பிரேசர் மலை தண்ணீர் மாதிரி பீறிட்டு வழிய கமலின் வீட்டை விட்டு வெளியேறினாள் சுதா.

சுதா கோலாலம்பூரில் வசிக்கிறாள். ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறாள். வயது 27. வீட்டில் மாப்பிள்ளை பார்த்தார்கள். அவர்தான் கமல்.

பினாங்கில் வேலை பார்க்கிறார். வசதி இல்லை. வாடகை வீட்டில் வசிக்கிறார். இருந்தாலும் பார்த்த மாத்திரத்திலேயே சுதா மனதை பறிகொடுத்து விடுகிறாள்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் கமல் பார்ப்பதற்கு அழகானவர் இல்லை. சுமார் ரகம்தான்.

இந்த நிலையில் ஒரு நாள் தொலைபேசியில் சுதாவை அழைத்து உன்னைப் பார்க்கணும் போல் இருக்கு. நெஞ்சு வலிப்பது போல் தெரிகிறது. டாக்டரிடம் காண்பித்து மாத்திரை சாப்பிடுகிறேன். உடனே புறப்பட்டு வா என அழைத்திருக்கிறார்.

இந்த அப்பாவிப் பெண்ணும் அடித்துப் பிடித்துக் கொண்டு பினாங்கிற்கு ஓடி இருக்கிறார். வந்த இடத்தில் வசியமாக பேசி காரியத்தைக் கச்சிதமாக முடித்து விட்டார்.

ஏமாற்றத்தில் கருகிப் போன அந்தப் பெண் என்னைப் பார்க்க வந்தார். நடந்ததைச் சொன்னார். இருவரின் ஜாதகங்களையும் பார்த்தேன்.

இருவருக்கும் பொருத்தமில்லை. மேலும் அந்தப் பையன் ஜாதகத்தில் இடக்கு மடக்காக இருந்த சில கிரகங்கள் பெண்கள் விஷயத்தில் தில்லாலங்கடி வேலை செய்யும் பெரும் கில்லாடி என்பதை வெளிப்படுத்தியது.

ரோஜாப் பூவில் தேன் குடித்த வண்டு தாமரை மலருக்குத் தாவி விட்டது. இந்த விஷயம் சுதாவுக்குத் தெரிய வந்தது. இது அவரை எரிமலைக்குள் தள்ளியது.

என்ன செய்வது விதியின் விளையாட்டை அவருக்கு விளக்கிச் சொன்னேன். கெடுத்தவனை மறந்து விட்டு அடுத்த காரியத்தில் அக்கறைப்படுமாறு அறிவுறுத்தினேன்.

முற்றும் ஏற்றுக் கொள்ளாத மனதோடு சற்று ஆறுதல் வயப்பட்டு சென்றார். மனது வலிக்கும்போதெல்லாம் தொலை பேசியில் அழைக்கிறார்.

அப்பாவிப் பெண்ணின் மனக்காயத்திற்கு என் வசந்த வார்த்தைகள் மருந்தாக அமைகின்றன. அடுத்த வருடம் ஜூலை மாதத்திற்கு பின்னால் இவரின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி உண்டாகும்.

மண வாழ்க்கை கைகூடி மகிழ்ச்சியாக வாழ்வார். இரண்டு குழந்தைகளுக்கு தாயாவார். கட்டிய கணவனை கடவுளாக மதிப்பார்.

விதியால் நடந்த கொடுமையை நாம் தவறு எனச் சொல்லி இவரைக் குற்றவாளியாக்க முடியாது. அதே நேரத்தில் திமிர் எடுத்துப் போய் சதை விளையாட்டு நடத்தி சந்தி சிரிக்கும் பெண்களை விதியின் பேரைச் சொல்லி விலக்கி வைக்க இயலாது.

அந்த இளம் பெண்ணின் நலன் கருதி பெயரை மாற்றி பிரசுரித்திருக்கிறேன். நான் வணங்கும் விநாயகப் பெருமானும் இளவல் முருகப் பெருமானும் அவளுக்கு எல்லா நலன்களையும் அளிப்பார்கள்.

No comments:

Post a Comment