Monday 21 September 2015

"பிள்ளைக்கு தடுப்பூசி போடணும், எப்ப போகலாம்"
"நாளைக்கு காலையில போவோம்"
"கண்டிப்பாக நாளைக்கு கூட்டிக்கிட்டு போவீங்களா"
"நாளைக்கு அவசியம் போகலாம்"
"உங்க தம்பி காரை எடுத்துக்கிட்டு போயிடுவாரு. அப்புறம் எப்படி போக முடியும்"
"அதைப்பத்தி உனக்கு என்ன கவலை. கூட்டிக்கிட்டு போக வேண்டியது என் பொறுப்பு"
"கார் இல்லாம் எப்படி போக முடியும்"
"கார் இல்லைன்னா என்ன, பஸ்ஸில போகலாம்"
"பஸ்ஸில போன நம்ம கவுரவம் என்ன ஆகிறது"
"ஏன், உங்க லட்சணத்துக்கு பஸ்ஸில போக முடியாதோ, கார் கேட்குதோ"
"நாளைக்கு மட்டும் கூட்டி போகலைன்னு வச்சுக்கங்க, அப்புறம் நடக்கிறதே வேறே"
"என்னடி பண்ணுவே, நிக்க வச்சு வெளக்கு மாத்தால அடிப்பியா"
"இங்க பாருங்க, நீங்க என்னடின்னா, நானும் என்னடான்னு கேப்பேன். எங்க லட்சணம் தெரிஞ்சுதானே, நடையா நடந்து என்னைக் கட்டிக்கிட்டீங்க. நானா உங்களுக்கு வாக்கப்படுறேன்னு நட்டுக்கிட்டு நின்னேன்."
"என்னடி வாய் நீளுது. அப்புறம் என் கை நீளும் பாத்துக்க"
"உங்க கை நீண்டா நான் பாத்துக்கிட்டு சும்மா இருக்க உங்க அண்ணன் பொண்டாட்டி மாதிரி டொப்பிரி இல்லை. அப்புறம் என் கால் நீளும் தெரிஞ்சுக்கங்க"
அவ்வளவுதான் அவனுக்கு ஆத்திரம் தலைக்கு மேல் தாண்டவம் ஆடியது. ஓங்கி கன்னத்தில் ஓர் அறை கொடுத்தான்.
அடுத்த வினாடி அவள் செய்த காரியம் வீட்டில் உள்ளவர்களை விக்கித்துப் போக வைத்து விட்டது.
காலை தூக்கி ஜாக்கி ஜான் மாதிரி கட்டிய கணவனின் நெஞ்சில் ஓர் உதை விட்டாள்.
அம்மா, தம்பி, தம்பி மனைவி, அண்ணன் மனைவி ஆகியோர் முன்னிலையில் இப்படி நடந்தவுடன் அவமானத்தால் குறுகிப் போன அவன் உதைத்த காலைப் பிடித்து தலைகுப்புற அடித்து விட்டான்.
ஐயோ... அப்பா... என கத்திக் கொண்டு சுருண்டு விழுந்து தரையில் கிடந்தாள். அவள் போட்ட சத்தத்தில் ஊரே கூடி விட்டது.
இடுப்பு ஒடிந்து விட்டதோ என்ற பயத்தில் அள்ளிக் காரில் போட்டுக் கொண்டு மருத்துவ மனைக்கு விரைந்தார்கள்.
ஸ்கேன் செய்து பார்த்ததில் பாதிப்பு ஒன்றுமில்லை என்று தெரிந்த பின்னர்தான் அவர்களுக்கு நிம்மதிப் பெருமூச்சு வந்தது.
பையன் செ

No comments:

Post a Comment