Wednesday 28 October 2009

கணவனைப் பிரிக்கும் 8-ஆம் இடத்து செவ்வாய்


புருசனை மதிக்காத அந்தப் பொண்ணுக்கிட்ட இந்த விஷயத்தைத்தான் சொன்னேன். "இங்க பாரும்மா... அவரோட ஜாதகப்படி இரண்டு தாரம். உனக்கு நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்கு. புத்தி தடுமாறி இந்த வீணா போன டிவி நாடகங்களைப் பாத்து... அதுமாதிரி நடக்க நினைச்சு... வாழ்க்கையைக் கெடுத்துக்காதே.

உன்னோட இடத்துக்கு வேற ஒருத்தி வந்துட்டான்னா.. அப்புறம் தலைகீழா நின்னாலும் இதுமாதிரியான வாழ்க்கை கிடைக்காது"ன்னு சொன்னவுடன் அலறி அடிச்சுக்கிட்டு ஓடி வந்தாள்.

அந்தப் பெண்ணுக்கு லக்கனத்துக்கு இரண்டில் சனி. இதைச் சொல்லி " நீ அடங்கி நடக்காவிட்டால் அடுத்து வருகிற தசாபுத்தியில் நீ வாழ்க்கையை இழந்து விடுவாய்.

உன்னுடைய முட்டாள்தனமான நடவடிக்கைகளால் பூனையாக இருக்கும் கணவனை புலியாக மாற்றி விடாதே. அப்புறம் உன்.கதி அதோகதிதான்" என எச்சரித்தேன்.

சில நேரங்களில் அதிர்ச்சி வைத்தியம் நன்றாக வேலை செய்யும் என்பதை நன்கு அறிவேன். இப்போது பிரச்சினை இல்லாமல் குடும்ப வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. அவ்வப்போது என்னிடம் ஆலோசனை கேட்டுக் கொள்கிறார்கள். ஒரு குடும்பத்தை சேர்த்து வைத்த நிம்மதி எனக்கு.

சின்ன ஜோதிட குறிப்பு: ஒரு பெண்ணின் லக்கனம் கும்பம் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு எட்டாம் இடம் கன்னி. இதில் செவ்வாய் இருந்து சுபர் பார்வை இல்லை என்றால் அந்தப் பெண், நிரந்தரமாக கணவனைப் பிரிந்து விடுவாள் என்பது ஜோதிட விதி.

No comments:

Post a Comment