Friday 9 October 2009

காளசர்ப்ப தோஷம் காளசர்ப்ப யோகமாக மாறும்

நீங்களே எப்படி சுலபமா உங்க கோச்சார பலன்களைப் பார்த்துக் கொள்ளலாம் என்பதைப் பற்றி எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் அதற்கு முன்பாக இன்றைக்கு என்னைக் காண வந்த ஒரு பெண்ணோட ஜாதக பலன்களைப் பார்ப்போம். அந்த இளம் பெண்ணுக்கு இருபத்து நாலு வயது. பார்க்க லட்சணமான முகவெட்டு. நல்ல வேலையில் இருக்கிறார். கை நிறையச் சம்பாதிக்கிறார்.


திருமணத்திற்காக காத்திருக்கிறார். கைகூடி வரவில்லை. திருமண வகையில் தோஷமில்லை. இருந்தாலும் திருமணத்தடையை ஏற்படுத்தக்கூடிய அம்சங்கள் இந்த ஜாகத்தில் இருக்கின்றன.

லக்கனமும் ராசியும் ஒன்று. லக்கனத்தில் சனி. புத்திரஸ்தானத்தில் செவ்வாய். இப்படி சில தடைகள். இவற்றைத் தாண்டலாம். ஆனால், இவர் ஜாதக கிரக முடக்கம் அமைப்புடையது. அதாவது காளசர்ப்ப தோஷம். இந்தத் தோஷம் 35 வயதுக்கு பிறகு யோகமாக மாறும்.

ராகு, கேது என்ற சர்ப்ப கிரகங்களுக்கிடையே மற்ற ஏழு கிரகங்களும் மாட்டிக்கொண்டால் அதற்கு காளசர்ப்ப தோஷம் என்று பெயர். இவருக்கு கொஞ்சம் காலம் கடந்து திருமணம் நடக்கும்.

ஆனால், அந்த திருமண வாழ்க்கையில் இவர் அனுசரித்து நடந்து கொண்டால் பிரச்சினை இல்லாமல் இருக்கும். கொஞ்சம் மதியோடு நடந்தால் விதியை வெல்ல முடியாவிட்டாலும் அதன் தாக்கத்தில் இருந்து விலகிச் செல்ல முடியும்.

நான் கூறிய வார்த்தைகளைக் கேட்டு நம்பிக்கையோடு சென்றிருக்கிறார்.

1 comment: