Friday 9 October 2009

ஜெயலலிதாவும் சனி பகவானும்

இதுவரை கொட நாட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஜெயலலிதா சென்னை திரும்பப் போகிறார். அதிமுக தொண்டர்களுக்கு ஒரே மகிழ்ச்சி. அதிமுக இருக்கிறதா காணாமல் போய்விட்டதா என்று கேட்கும் நிலையில் இருக்கும்போதும் ஏன் ஜெயலலிதா மௌனமாக இருந்தார்.


எல்லாம் அவருக்கு நடக்கும் ஏழரைச் சனிதான். அதன் பாதிப்பில் இருந்து தப்பிக்கத்தான் அவர் எல்லாரையும் விட்டு ஒதுங்கி இருந்தார்.

ஜெயலலிதா 24-2-1948-இல் பிறந்தவர். இவருடைய நட்சத்திரம் மகம் 1-ஆம் பாதம். நட்சத்திரத்துக்கு அதிபதி கேது. ராசி சிம்மம். இவர் ஏழரைச் சனியில் பிறந்தவர். ராசிக்கு 12-இல் சனி. இப்பொழுது ஏழரைச் சனியின் கடைசி பாகத்தில் இருக்கிறார்.




சிம்மத்தின் அதிபதி சூரியன். சனிக்கும் சூரியனுக்கும் எப்போதும் ஆகாது. இதில் வேடிக்கை என்னவென்றால் சூரியனுக்கு பிறந்தவர்தான் சனி. சூரியனின் மனைவி பெயர் சம்ஞா. சூரியனுக்கும் சம்ஞாவுக்கும் பிறந்தவர் யமன்.

என்னதான் அன்பு மனைவியாக இருந்தாலும் சூரியனின் வெப்பத்தை சம்ஞாவால் தாங்க முடியவில்லை. அதனால் தன்னுடைய நிழலை ஒரு பெண்ணாக (அதன் பெயர் சாயா.... கவனிக்க பாபா படப் பாடல், சாயா... சாயா... மாயா...மாயா...) படைத்து சூரியனிடம் தள்ளிவிட்டு தந்தை வீட்டிற்கு போய்விட்டாள்.

இந்த சாயா தேவிக்கும் சூரியனுக்கும் பிறந்தவர்தான் சனி. ஒரு கட்டத்தில் பங்காளிச் சண்டை முற்றி சனியை யமன் எட்டி உதைக்க சனிக்கு கால் ஒடிந்து விட்டது. அதனால் சனி நொண்டி நொண்டி மெதுவாகத்தான் நடப்பார். ஆகவே அவருக்கு சனைச்சரன் ( மெதுவாக நடப்பவன்) என்று பெயர்... ராசி மண்டலத்தில் சூரியனைச் சுற்றி வர சனிதான் அதிக காலம் எடுத்துக் கொள்கிறது. அதாவது 30 ஆண்டுகள்.

இப்படி பலவிதங்களில் பாதிக்கப்பட்டதால் சூரியன் மீது சனியனுக்கு அடங்காத கோபம். அதனால்தான் சிம்ம ராசிக்காரர்களை எழரைச் சனி காலத்தில் சனிபகவான் படாத பாடு படுத்தி விடுகிறார்.

ஏழரைச் சனி காலத்தில் சனியனோடு மல்லுக்கட்டாமல் சற்று ஒதுங்கி இருந்தால் அவர் சற்று கரிசனமாகவே கஷ்டத்தைக் கொடுப்பார். ஆகவே, எல்லா வேலைகளையும் ஒதுக்கிவிட்டு ஜெயலலிதா கொட நாட்டில் ஓய்வெடுத்தார்.

இந்தச் சுற்றில் சனியின் பாதிப்பு குறைவாகவே இருக்கும். இருந்தாலும் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க கடுமையாக உழைக்க வேண்டும். மேலும் மகம் ஒன்றாம் பாதத்திற்கு அதிபதி செவ்வாய் .போர்க்குணம் கொண்டவர். இவர் யாருக்கும் மடங்கிப் போக விடமாட்டார். இதுதான் ஜெயலலிதாவுக்கு இருக்கும் பலவீனம். இதைச் சரி செய்ய வேண்டும். இதைச் செய்ய வேண்டிய பொறுப்பு அவருக்கு அருகில் இருக்கும் ஆஸ்தான ஜோதிடர்களின் வேலை.

அதே நேரத்தில் ஏழரைச் சனி எல்லாருக்கும் கெடுதலை செய்வார் என்று கூறமுடியாது. நட்பு வீடு, உச்ச வீடு, நீச்ச வீடு போன்றவற்றில் இருந்தால் சனியின் தொல்லை மிகக் குறைவாகவே இருக்கும்.

2 comments:

  1. good .......your statement is to the core.very correct.

    ReplyDelete
  2. மிதுனலக்னம் ஜெயலலிதா

    ReplyDelete