Tuesday 16 December 2014

விருச்சிக ராசி சனி பகவான் வில்லங்கம் செய்வாரா?

துலாம் ராசியில் இருந்து துள்ளிக் குதித்து சனி பகவான் விருச்சிக ராசிக்கு தாவி வந்திருக்கிறார்.

ஆகா இன்னும் இரண்டரை வருடம்தான் என்று துலாம் ராசிக்காரர்கள் பெருமூச்சு விட.... ஐந்தரை ஆண்டுகளை எப்படிக் கடத்தப் போகிறோம் என விருச்சிக ராசிக்காரர்கள் விசும்பி நிற்க...விரையச் சனியின் பிடியில் சிக்கிய தனுசு ராசிகாரர்கள் என்ன நடக்குமோ என கலங்கித் தவிக்க சனிபகவான் குடி கொண்டிருக்கும் கோவில்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது.

ஆதிசிவனையே ஆட்டிவைத்த சனி பகவானே எங்கள் பக்கம் உன் கோபப் பார்வையைத் திருப்பி விடாதே என சாப விமோசன விண்ணப்பம் அளிக்க மக்கள் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

வீடு வாசல் மாடி மனை என்று செல்வத்தையும்செல்வாக்கையும் அள்ளித்தரும் சனி பகவானைப் பார்த்து ஏன் மக்கள் இப்படிப் பயப்படுகிறார்கள்.

இந்தப் பயம் நியாயம்தானா... இனி வரும் நாட்களில் நாம் அலசி ஆராய்வோம். நீண்ட நாட்களாக  என் பதிவைப் பார்த்து பாசத்தைப் பரிமாறி வந்த இனிய நண்பர்களோடு இனி தடையின்றி உசாவ எனக்கு அவகாசம் ஏற்பட்டுள்ளது.

என்னைச் சந்தித்த அன்பர்களின் அனுபவங்களை இனிமேல் தங்களுக்கு பந்தி வைக்கிறேன். அதைப் படித்து முடிந்தவரை பயன்பெற வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.

No comments:

Post a Comment