Wednesday 17 December 2014

கெடுத்த சனி... கொடுத்த சனி

எவ்வளவு பெரிய ரவுடியாக இருக்கட்டும். தாதாவாக பேட்டையைக் கலக்கட்டும், ஏழரைச் சனி என்றால் காலரை தொங்கவிட்டு பம்மி பதுங்குகிறார்கள்.

ஏன் இந்தப் பயம். அவர்களின் தெனாவட்டு தெறித்துப் போனதற்கு என்ன காரணம். கத்திக்கும் ரத்தத்திற்கும் கலங்காதவர்கள் சனிபகவான் என்றாலேபூனையைப் பார்த்த எலியைப் போல பொந்துக்குள் ஒளிந்து கொள்கிறார்கள்.

சனி நினைத்தால் அவர்களுக்கு சங்கஊதி விடுவார். கொஞ்சம் கோபப்பட்டால் நெஞ்சு வேலை நிறுத்தம் செய்து விடும். அதனால் தான் அச்சம் அவர்களை ஆட்டிப் படைக்கிறது.

சனிபகவான் இத்தனை பொல்லாதவரா... அதெல்லாம் கிடையாது. நல்லவருக்கு நல்லவர். பொல்லாதவருக்கும் நல்லவர்.

நல்லவர்களாக இருந்தால் போன ஜென்ம பாவபுண்ணியங்களுக்கு ஏற்ப பலன் கொடுப்பார். கெட்டவர்களாக இருந்தால் முதலில் கண்டிப்பார். அதிலும் அடங்கவில்லை என்றால் பின்னர் தண்டிப்பார்.

ஏழரைச் சனி காலத்தில் எவ்வளவு கடுமை காட்டுகிறாரோ... அதற்கு ஈடாக அடுத்து வரும் காலங்களில் அள்ளிக் கொடுக்கவும் தயங்க மாட்டார்.

அப்படி ஏழரைச் சனி காலத்தில் திருவோடு ஏந்தும் நிலைக்குச் சென்ற ஒருவர் இப்போது பணம் பதவி என்று உயர்ந்த நிலையில் இருக்கிறார்.

பத்து ஆண்டுகளுக்கும் முன்னர் என்னைச்சந்தித்தார். என்னிடம் ஆலோசனை கேட்டுச் சென்றார். அதன் பின்னர் கடந்த மாதம் என்னை வந்து பார்த்தார்.

பாலைவனமாக இருந்த அவரின்  வாழ்க்கை சோலைவனமாக மாறி இருப்பதை அவரின் தோற்றமே உணர்த்தியது.

அவர் பட்ட துயரம் என்ன. அதில் இருந்து எவ்வாறு  மீண்டார் என்பதை அடுத்து பார்ப்போம்.

No comments:

Post a Comment